Disqus Shortname

அகரம்தூளி கிராமத்தில் மாட்டுப் பொங்கல் விழா

உத்திரமேரூர் 16/01/2020
உத்திரமேரூர் அடுத்த அகரம்தூளி கிராமத்தில் மாட்டுப் பொங்கல்
பண்டிகையையொட்டி கிராமத்து இளைஞர்களுக்கிடையே கோலம், கபடி, வாலிபால், உரியடி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற  இளைஞர்களுக்கு கிராம பெரியோர்கள் வாழ்த்தி பரிசுகள்  வழங்கினர். இதைத் தொடர்ந்து கிராமத்திற்கு மத்தியில் இளைஞர்கள்  இணைந்து பொங்கலிட்டு கொண்டாடினர். பின்னர் விவசாயிகளின் மாடுகளை  மலர்களால் அலங்காரம் செய்து கொம்பில் வர்ணமிட்டு பலூன் கட்டி முக்கிய  வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து மாடுகளுக்கு படையலிட்டு  மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து  கிராமத்து சிறுவர்களின் பாட்டு, நடனம், நாடகம் போன்ற கலை  நிகழ்ச்சிகளும் நடந்தது. நிகழ்வின் போது இளைஞர்கள் அனைவரும் கலந்து  கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின்  ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

No comments