Disqus Shortname

உத்திரமேரூர் அருகே இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் இருளர் மற்றும்
பழங்குடியின மக்களுக்கான குறை தீர்வு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
முகாமில் தனி வட்டாட்சியர் ஞானவேல் தலைமை தாங்கினார். வருவாய்
ஆய்வாளர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இருளர் மற்றும்
பழங்குடியினர்களிடமிருந்து புதிய வீட்டுமனைப் பட்டா, ரேஷன் கார்டு, பெயர்
நீக்கல் மற்றும் சேர்த்தல், புதிய ஆதார் கார்டுகள் மற்றும் திருத்தங்கள்,
விதவை மற்றும் முதியோர் உதவித் தொகைகள், இயற்கை மரணம்
ஈமச்சடங்கு உதவித் தொகை, மற்றும் இருளர் மற்றும் பழங்குடியின
மக்களுக்கு அரசின் சலுகைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட
மனுக்கள் துறை ரீதியான அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மானாம்பதி, களியாம்பூண்டி, விசூர், காரணை, இளநகர்,
பெருநகர், தண்டரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருளர் மற்றும்
பழங்குடியினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை
வழங்கினர். நிகழ்ச்சியில் இருளர், பழங்குடியினர் மற்றும் அரசு அலுவலர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments