Disqus Shortname

பாப்பநல்லூர் மற்றும் அழிசூர் கிராமங்களில் பொங்கல் விளையாட்டு போட்டி!!

பாப்பநல்லூர்


உத்திரமேரூர் 18/01/2020
உத்திரமேரூர் அடுத்த பாப்பநல்லூர் கிராமத்தில் கானும் பொங்கலையொட்டி பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கிடையே
விளையாட்டுப்
அழிசூர்
போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சியில் கிராமப் பெண்களுக்கிடையே விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது. இதில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பாதிப்பு, சுற்றுப்புற தூய்மை மற்றும் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் கோலங்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதைத்தொடர்ந்து இளைஞர்களிடையே கபடி, சறுக்கு மரம் ஏறுதல், உரியடி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. குழந்தைகளிடையே பாட்டு  பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இறுதியில் போட்டிகளில் வெற்றி  பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சிகளில் நடனம், நாடகங்கள் மூலம் கிராமத்து சிறார்கள்  தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் கிராம பெரியோர்கள் இளைஞர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.
அழிசூர்
 இதேப் போல் உத்திரமேரூர் அடுத்த அழிசூர் கிராமத்தில் நடந்த விழாவில்  இளைஞர்களுக்கிடையே சிலம்பம், மான்கொம்பு, சுருள்வாள், தவளை ஓட்டம்,  கோணி ஓட்டம், லெமன் ஸ்பூன் ஓட்டம் என பல ஓட்டப் பந்தையங்கள் நடந்தது. பின்னர் பெண்களுக்கிடையே தமிழர்களின் பாரம்பரியம்  பாதுகாக்கும் வகையில் கோலப்போட்டிகள், கயிறு இழுத்தல், இசை நாற்காலி  உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. மற்றும் சிறுவர்களுக்கிடேயே  போட்டிகள்  நடத்தப்பட்டு போட்களில் கலந்து கொண்ட அனைவருக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மக்கள் அனைவரும் கலந்து  கொண்டு பரிசு பெற்றனர்.

No comments