Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அங்கன்வாடி பணியாளர்களுக்கான குழந்தைகள் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த அ.பி.சத்திரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான
தோழமைக் கூட்டமைப்பு மற்றும் சர்வோ டிரஸ்ட் இணைந்து ஒன்றிய
அளவிளான அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகள் உரிமை மற்றும்
பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமைக் கூட்டமைப்பு தலைவர்
டாக்டர்.தேவன்பு தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத்
தலைவர் இராமச்சந்திரன், குழந்தைகள் மக்கள் அமைப்பு துணைத் தலைவர்
சுமதி, ஒருங்கிணைப்பாளர் ஆலீஸ், குழந்தைகள் மக்கள் அமைப்பில் பெண்
குழந்தைகள் பாதுகாப்பு நிர்வாகி ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை
வகித்தார். சர்வோ டிரஸ்ட் நிர்வாகி கலைச்செல்வி அனைவரையும்
வரவேற்றார். நிகழ்வில் குழந்தைகள் பாதுகாப்பின் அவசியம், குழந்தைகளை
வளர்க்கும் முறைகள், குழந்தைகளின் கட்டாய கல்வி, குழந்தை திருமண
தடை சட்டம், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுதல், பெண்
குழந்தைகளிடத்தில் தொடு முறைகள், பாலியல் தொந்தரவிலிருந்து
குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள், அங்கன்வாடி
மையங்களில் குழந்தைகளை கண்காணித்தல், குழந்தைகளின் ஆரோக்கியமான
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சூழ்நிலையை உருவாக்குதல் மேலும்
கல்வி மேளாண்மைக்குழுவுடன் இணைத்து செயலாற்றுதல்
உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் தன்னார்வலர்
சரளா நன்றி கூறினார்.

No comments