Disqus Shortname

வாலிபர் வெட்டிக் கொலை 5 பேர் கைது.

உத்திரமேரூர் 16/01/2020
உத்திரமேரூர் பேரூராட்சிகுட்பட்ட கிழக்கு கம்மாளத் தெருவில், வாலிபர்
வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் உத்திரமேரூர்
போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு
மதன்குமார்
விரைந்து வந்த போலீசார் அங்கு சென்று பார்த்ததில் கழுத்தில் சரமரி
வெட்டுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர்
சடலம் இருந்தது. இதையடுத்து வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார்
பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்து இது குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் உத்திரமேரூர்
பேரூராட்சிகுட்பட்ட தண்டுகாரத் தெருவை சேர்ந்த நாகபனின் மகன்
மதன்குமார் 26 டிரைவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இச்சம்பவம்
குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டனர்.
இதில் மதன்குமார் வீட்டிற்கு அருகில் உள்ள எஸ்.பி.கோவில் தெருவைச்
சேர்ந்த எலக்ரீசியன் தசரதனின் மனைவி அஸ்வினி 28. தசரதன்
வெளியூருக்கு வேலைக்கு சென்ற பல நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவார்.
அப்போது அஸ்வினிக்கும் மதன்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக
கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தசரதன் மதன்குமாரையும்
அஸ்வினியையும் கண்டித்து எச்சரித்துள்ளதுள்ளார். இதனால் செய்வதறியாத அஸ்வினியும் மதன்குமாருடன் வீட்டைவிட்டு வெளியேறி சிங்கபெருமாள் கோவிலில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து நேற்று(15/01/2020) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதன்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். தகவலறிந்த தசரதன் அவரின் நண்பர்கள் மூலம் மதுஅருந்த அழைத்துள்ளார். மதன்குமாரும்
நண்பர்களுடன் மது அருந்தியிருக்கும் போது திடீரென தசரதன் உள்ளே புகுந்து தான் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மதன்குமாரை சரமாரி வெட்டினார். இதில் மதன்குமார் கழுத்தில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டு அங்கேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். என்பது விசாரணையில் தெரியவந்த்து. இதையடுத்து தசரதன் மற்றும் அவனது கூட்டாளிகள் வெள்ளைசெட்டித் தெருவைச் சேர்ந்த கண்ணாயிரம் 24, தேவா 30, கன்னியப்பன் 34, கார்த்திகேயன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தனர்.

No comments