Disqus Shortname

உத்திரமேரூர் அருகே திமுக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

உத்திரமேரூர் 20/01/2020
 உத்திரமேரூர் அடுத்த குரும்பிறை கிராமத்தில் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் மரக்கன்று நடும் விழா (20-01-2020) நடந்தது. நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மினாதாஸ், முத்து, கருணாகரன், மாணவரணி முரளி, பொறியாளரணி சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்கள் வெங்கடேசன், சக்திவேல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு குரும்பிறை நீர்நிலை பகுதிகள், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டுவைத்து விழாவினை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்வின் போது உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments