Disqus Shortname

புகையில்லா போகிப்பண்டிகை அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர் 10/01/2020
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்கள் புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி 
நடத்தினர். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மஞ்சுளா தலைமை தாங்கி
பேரணியினை துவக்கி வைத்தார். பேரணியானது திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள  முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் வரவிருக்கும் போகிப்பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பின் அவற்றை சேகரித்து வீட்டிற்கு வரும் துப்புரவு பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும், புகையில்லா போகியினை கொண்டாடி காற்று மாசுபடுவதை தவிர்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments