Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தங்க நகைக்காக நண்பனை கொலை செய்த இருவர் கைது

உத்திரமேரூர் 22/01/2020
உத்திரமேரூர் அருகே பெருநகர் அனுமந்தண்டலம் கிராம சாலையில் அரசு  டாஸ்மாக் இயங்கி வருகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் துவங்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கும் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள வயல்வெளி மற்றும் சவுக்கு தோப்புகளில் மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் ஒன்று கிடந்தது. அப்போது அங்கு மது அருந்த சென்ற குடிமகன்கள்
அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெருநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெருநகர் போலீசார் சவுக்கு தோப்பில் பிணமாக கிடந்த வாலிபர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா மகாஜனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் 37 என்பது தெரிய வந்தது. இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை போலீசார் ஈடுபட்டனர். இதில்   அரிகிருஷ்ணனின் நண்பர்கள் ஆக்கூர் கூட்ரோடை சேர்ந்த சங்கர் 37, மற்றும் உக்கம் பெரும்பாக்கத்தை சேர்ந்த சிராஜுதீன் 23  ஆகிய மூவரும் மதுஅருந்தி கொண்டிருந்தனர். அப்போது அரிகிருஷ்ணனின்  தங்க ஜெயின் மற்றும் மோதிரத்தினை நண்பர்கள் இருவரும் சங்கர் மற்றும் சிராஜுதீன் கேட்டதாக கூறப்படுகிறது. அரிகிருஷ்ணன் தர மருத்ததால் ஆத்திரமடைந்த நண்பர்கள் அரிகிருஷ்ணனுக்கு மதுபானம் ஊற்றி கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த தங்க செயின் மற்றும் மோதிரத்தினை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து  இருவரையும் கைது செய்த பெருநகர் போலீசார் சங்கர் மற்றும் சிராஜுதீன் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments