Disqus Shortname

எஸ்.பி. காவ்யா மருத்துவராக விருப்பம்

உத்திரமேரூா் மே.7 
எஸ்.பி. காவ்யா
அரசுப் பள்ளிகள் அளவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி எஸ்.பி. காவ்யா , இதய நோய் பிரிவு மருத்துவராக விரும்புவதாகத் தெரிவித்தார்.
உத்தரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.பி. காவ்யா, அரசுப் பள்ளிகள் அளவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், தமிழ்-196, ஆங்கிலம்-186, இயற்பியல்-194, வேதியியல்-196, உயிரியியல்-195, கணக்கு-200 என மொத்தம் 1,167 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவியின் தாய் விஜயா அரசுப் பள்ளி ஆசிரியராவார். தந்தை பேரானந்தம் எஸ்.ஐ.சி. முகவர்.
தேர்வு முடிவு தொடர்பாக மாணவி கூறியது: இதய நோய் குறித்து இன்னும் கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை. இதனால், கிராமப் பகுதியில் அதிக அளவில் இறப்பு நிகழ்கிறது.
எனவே, இதய நோய் பிரிவு சிறப்பு மருத்துவராகி கிராமத்தில் சேவைச் செய்ய விரும்புகிறேன் என்றார் அவர்.

No comments