Disqus Shortname

உத்தரமேரூர் அருகே பலத்தமழை: இடி விழுந்து ஒருவர் பலத்த காயம்

 உத்திரமேரூர் மே.15 2015: 
அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிவரையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.   உத்தரமேரூர்  சுற்றியுள்ள கிராமங்களிலும் இதே போல் அதிகாலையில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டில் தூக்கம் இன்றி தவித்துவந்தனர்.
இன்று காலை   பலத்த மழை பெய்த போது பலத்த இடி விழுந்தது. இதில் உத்தரமேரூர் அடுத்த   மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் என்கிற நடராஜ் (60) இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டில் டி.வி.பார்த்து கொண்டு இருந்தார் அப்போது எதிப்பாராத நிலையில் வீட்டின் மேற்கூரையின்(காண்கீர்ட் தளம்)  மீது இடி விழுந்தது.  மேற்கூரையின்  ஒரு பகுதி டி.வியின் மீது விழுந்து இதில் டி.வி வெடித்து டி.வி.பார்த்து கொண்டு இருந்த நரசிம்மன் என்கிற நடராஜ் மீது கண்ணாடி துகள்கள் உடல்மீது பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அணுமதிக்கபட்டு சிகிச்சை பெ 
ற்று வருகிறார் 

No comments