Disqus Shortname

உத்திரமேரூரில் சோழா அரிமா சங்கம் இரத்ததான முகாம்

உத்திரமேரூர் மே,16

உத்தரமேரூரில் சோழா அரிமா சங்கத்தின் சார்பில் இலவச இரத்தான முகாம்
நடந்தது. இம்முகாமில் உத்திரமேரூர் சோழா அரிமா சங்க தலைவர் கே.சங்கரன்
தலைமை தாங்கினர்.  செயலாளர் ஆர்.நீலகண்டன் வரவேற்றார். மாவட்ட துணை
ஆளுநர் அன்பு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சோழா அரிமா சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் உட்பட 76 பேர்
ரத்ததானம் அளித்தனர். முகாமில் மண்டல தலைவர் எஸ்.கமல்கிஷோர், அரசு
வழக்கறிஞர் மணி, உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் பொருளாள்ர் ஆறுமுகம்
நன்றி கூறினார்.

No comments