Disqus Shortname

சாலை விபத்தில் இளம்பெண் பலி


உத்தரமேரூரில் சாலையில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியை, இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்தார்.
உத்தரமேரூர் தண்டுகாரத் தெருவைச் சேர்ந்தவர் சித்திரை. இவரது மகள் கிரிஜா (21). இவர் மணித் தோட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
உத்தரமேரூர் செங்கல்பட்டு சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது பின்னால் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தார்.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த உத்தரமேரூரைச் சேர்ந்த செல்வமும் (28) பலத்த காயமடைந்தார்.
இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், கிரிஜா மருத்துவனைக்குச் செல்லும் வழியிலேயே இறந்தார். செல்வத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், செல்வம் போதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments