Disqus Shortname

கருவேப்பம்பூண்டியில் ஓம்சக்தி ஸ்ரீ கீர்த்திமதி அன்னை சக்தி பீடத்தில் சித்திரை பௌர்ணமி விழா


உத்திரமேரூர் மே, 03

உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டியில் உள்ள ஓம்சக்தி ஸ்ரீ
கீர்த்திமதி அன்னை சக்தி பீடத்தில் நேற்று சித்திரைப் பெளர்ணமி பெருவிழா
வெகு சிறப்பாக  நடைபெற்றது. விழாவில் நேற்று காலை 5 மணியளவில் உலக மக்கள்
நன்மைக்காக சிறப்பு யாகமும் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் ஓம்சக்தி மஹா பக்ரஹா காளிதேவி
சிம்மவாஹினிக்கு 1008 குடங்களை சுமந்து ஊர்வளமாக வந்த பின் அன்னைக்கு
பால் அபிஷேகம் செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு
அலங்கரிக்கப்பட்ட இரதத்தில்  ஓம்சக்தி மஹா பக்ரஹா காளிதேவி சிம்மவாஹினி
அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி
அளித்தார். விழாவில் பக்தர் பெருந்திரளானோர் கலந்துக் கொண்டு அன்னையின்
அருளாசி பெற்றனர். விழாவில் ஓம்சக்தி பீடம் மங்கையின் மகிமை அறக்கட்டளை
சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments