Disqus Shortname

உத்திரமேரூர் அருகே வியாபாரி மர்மச்சாவு

உத்திரமேரூர், திங்கட்கிழமை, மே 18–
உத்திரமேரூரை அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 29). உத்திரமேரூர் பஜாரில் பேன்சி கடை வைத்து இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி செல்வி.
நேற்று காலை கடைக்கு சென்ற ஸ்ரீதர் இரவு வரை வீடு திரும்பவில்லை கடையும் பூட்டி கிடந்தது. அவரை மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பெருநகர் போலீசார் தண்டரை கூட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ரோட்டில் பைக்குடன் வாலிபர் இறந்து கிடப்பதை கண்டனர். விசாரணையில் அவர் மாயமான வியாபாரி ஸ்ரீதர் என்பது தெரிந்தது. அவரது உடலை மனைவி செல்வி அடையாளம் காட்டினார்.
ஸ்ரீதரின் உடலில் எந்த காயமும் இல்லை. மோட்டார் சைக்கிளும் சேதம் அடையவில்லை. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதலில் அவரை யாரேனும் கொன்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

No comments