Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பரபரப்பு : இளம்பெண் படுகொலை

உத்திரமேரூர் மே.15 2015:

உத்திரமேரூர் அருகே இளம்பெண்ணை கொலை செய்து ஆற்றங்கரையில் உடலை புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். உத்திரமேரூர் அடுத்த பெருநகர் செய்யாற்றின் ஓரத்தில் நேற்று மாலை சில நாய்கள் குரைத்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக விவசாயி ஒருவர் நடந்து சென்றார். நாய்கள் குரைத்து கொண்டிருந்த இடத்தில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. அருகில் சென்று பார்த்தார். அப்போது மனித கைகள் வெளியே தெரிந்தது. அதிர்ச்சிடைந்தார். யாரையோ கொலை செய்து ஆற்றில் புதைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

உடனே பெருநகர் போலீசுக்கு தகவல் கூறினார். இதற்கிடையில் தகவல் அறிந்து அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை தோண்டி எடுத்தனர். அது ஒரு இளம்பெண்ணின் உடல். அழுகி நிர்வாணமான நிலையில் இருந்தது. கொசுவலை மட்டும் போர்த்தப்பட்டிருந்தது. வயது 30 முதல் 35க்குள் இருக்கும். புதைத்து 3 நாட்களுக்கும் மேல் இருக்கும் என போலீசார் கூறினர். சில நாட்களாக லேசாக பெய்து வரும் மழையால் புதைக்கப்பட்ட உடலின் கைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.வழக்கு பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் யாரேனும் அடித்து கொலை செய்து புதைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா எனவும் அப்பகுதியில் காணாமல் போன இளம்பெண்கள் பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

No comments