Disqus Shortname

உத்திரமேரூரில் ஜமாபந்தி நிறைவு கூட்டம்

உத்திரமேரூர் மே15

உத்திரமேரூரில் நேற்று ஜமாபந்தி நிறைவு கூட்டம் நடந்தது 1424ம் பசலிக்கான ரையத் வாரிய வருவாய் தீர்வாயம் சார்பில் கடந்த மே5ம் தேதி துவங்கி மே 15 நேற்று முடிவுற்றது. இதில் பட்டா மாற்றம், குடும்ப அட்டைகள் உட்பட 1394 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் உடனடி தீர்வாக பட்டா மாற்றம் – 100, குடும்ப அட்டைகள் 70 தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் -2 நபர்களுக்கும் ரூ.7.500க்கு காசோலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  மாவட்ட கூடுதல் நிலப்பிரிவு அலுவலர் .பாரி அனைவரையும் வரவேற்றார். உத்திரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜபாத் பா.கணேசன் தலைமை தாங்கி தீர்வுகானப்பட்ட மனுக்களை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைச் சேர்மென் அ.ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் வி,ஆர்,அண்ணாமலை, கே,பிரகாஷ்பாபு, குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி,    ஓ.வி.வரதன், தங்கபஞ்சாட்சரம், லூசியாஜேம்ஸ், கா.ஜெயவிஷ்ணு, பொ.சசிகுமார், பி.குணா, புலியூர்பழநி, வி.பி.சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டாட்சியர் பேபிஇந்திரா நன்றி கூறினார்.

No comments