Disqus Shortname

உத்திரமேரூரில் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய அமல அன்னை -

உத்திரமேரூர் மே.14 2015 : உத்திரமேரூரை அடுத்த ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் தூய அமல அன்னை ஆலயத்தின் 176-ம் ஆண்டு பெருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 5-ம் தேதி முதல் காலை மற்றும் மாலை வேளையில் தூய அமல அன்னை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதியுலா வந்து, பொதுமக்களுக்கு காட்சியளித்தார். 9-ம் நாளான நேற்று காலை சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.இதைத் தொடர்ந்து, நேற்றிரவு தூய அமல அன்னை அலங்கரிக்கப்பட்ட 7 தேர்களில் பவனி வந்தார். இந்த தர் ஆர்.என்.கண்டிகை, வயலூர், ஆரோக்கியபுரம் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டது.இன்று காலை 5 மணியளவில் மீண்டும் தூய அமல அன்னை மீண்டும் ஆலயத்துக்கு திரும்பினார். இந்நிகழ்ச்சிக்கு உத்திரமேரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments