Disqus Shortname

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

உத்திரமேரூர் மே, 20

வந்தவாசி அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (29) இவர்
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக  இருசக்கரவாகனத்தில்
வந்து கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு வந்தவாசி சாலையில்
உத்திரமேரூர் அருகே உள்ள மங்களம் பகுதியில் வரும்போது நேற்று முன்தினம் இரவு 10.30
மணியளவில் இவர் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி
நிர்காமல் சென்று விட்டது. பலத்த காயமடைந்த பாஸ்கரை அப்பகுதி மக்கள்
மீட்டு செங்கல்பட்டு அரசு மருததுவமனைக்கு அனுப்பிவைத்து சாலவாக்கம்
போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சிகிச்சை பலநின்றி பாஸ்கர்
உயிரிழந்தார்.  இது குறித்து சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறது-

No comments