Disqus Shortname

உத்திரமேரூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க கொண்டாட்டம்

உத்தரமேரூர் மே.11
அ.இ. அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மே,11ம்தேதி திங்களன்று சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து விடுதலை ஆன செய்தி
வெளியானதை தொடர்ந்து உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்று கூடி பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்தோருக்கும் மொத்தம் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை
தெரிவித்து புரட்சி தலைவி வாழ்க தமிழக முதல்வர் அம்மா வாழ்க என்று கோஷமிட்டனர்.உத்திரமேரூர் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை களியாம்பூண்டி ஒன்றியகுழு உறுப்பினர் தங்க பஞ்சாட்சரம், தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன் தண்டரை தணிகைவேல்.பூந்தண்டலம் ராஜேந்திரன், புலியூர்பழனி, எம்.எஸ்.பெருமாள் மேனலூர் கிளை செயலாளர் வேலாயுதம் ஓ.வி.வரதன், கா.ஜெயவிஷ்னு, பொ.சசிக்குமார், அ.பி.சத்திரம்கோ.பெருமாள், கே.சி.எம்.விஜய், மு.துரைபாபு, பி.குணா, பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர் உத்திரமேரூர் ஒன்றியம் மானாம்பதியில் ஒன்றியகுழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர் தலைமையில் ஊராட்சிமன்ற தலைவர் சம்பத், மற்றும் ஏ.ராஜாமணி ஆகியோர் இனிப்புகள் வழங்கி பட்டாசுவெடித்து கொண்டாடினர், பெருநகர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் தலைமையில் ஒன்றியகுழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் பட்டாசுவெடித்து இனிப்புகள் வழங்கினார்கள். திருப்புலிவனத்தில் ஒன்றியக்கழக செயலாளர் கே.பிராகாஷ்பாபு  ஒன்றியகுழு உறுப்பினர் கார்வண்ணன் ஆகியோர் பட்டாசுவெடித்து இனிப்புகள் வழங்கினார்கள் அம்மா நிரபராதி விடுதலை என்ற செய்தி வந்தவுடன் உத்தரமேரூரில் மழை தூரல் பெய்தது குறிப்பிடத்தக்கது

No comments