Disqus Shortname

உத்திரமேரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலய இலட்சதீப விழா



உத்திரமேரூர் அக், 09

உத்திரமேரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலய இலட்சதீப விழா நேற்று
விமரிசையாக நடைப்பெற்றது. விழாவையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார செய்யப்பட்டது. மாலை சுவாமிக்கு இலட்சதீப அலங்காரமும், சந்தனக்காப்பு அலங்காரமும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின் பக்தர்கள் கோவில் முழுவதும் நெய் தீபங்கள் ஏற்றி சுவாமியை வழிப்பட்டனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் புலவர் விசூர் மாணிக்கனாரின் ஆன்மீக செற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உத்திரமேரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி பக்தஜன சபா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கனக்காக பக்தர் கலந்து கொண்டு நெய்தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.

No comments