Disqus Shortname

உத்திரமேரூரில் அ.தி.மு.க வினர் உண்ணாவிரத போராட்டம்

உத்திரமேரூர் அக்,02

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பினை கண்டித்து உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் நேற்று மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி போராட்டத்தை துவக்கி வைத்து சிறப்பு நீதி மன்ற
தீர்ப்பை கண்டித்து பேசினார். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், துணைச்சேர்மென் அ.ரவிசங்கர், ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, வாலாஜாபாத் சேர்மென் என்.எம்.வரதராஜிலு, திருவந்தவார்முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் புலியூர் பழனி, எடமிச்சி கௌசல்யாமுருகன், எம்.ஐ.சதீஷ்  மற்றும் பொ.சசிக்குமார், கா.ஜெயவிஷ்ணு, லூசியாஜேம்ஸ், முன்னிலையில் கருணாநிதி மற்றும் சுப்பிரமணிசுவாமி 
உருவகொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பினை  தெரிவித்தனர். ஜாமீன் மனு மீதான விசாரனையை தள்ளிப்போனதை கண்டித்து அ.தி.மு.க தொண்டர்கள் 40பேர் மொட்டை அடித்துக்கொண்டனர். இப்போராட்டத்தில் ஆயிரக்கனக்காக பொது மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments