படூரில் 15.50 இலட்ச மதிப்பில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் திறப்பு விழா
உத்திரமேரூர்
அடுத்த காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட படூர் கிராமத்தில் தேசிய ஊரக நல்வாழ்வு திட்டத்தின்
கீழ் ரூ.15.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய செவிலியர் குடியிருப்பு கட்டிட திறப்பு
விழா நேற்று நடைபெற்றது. மருந்தாளுனர் சதீஷ்குமார் வரவேற்றார். ஊராட்சி மன்றத்தலைவர்
சங்கீதாசிட்டிபாபு தலைமை தாங்கினார். காஞ்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்
மருத்துவர் கிருஷ்ணராஜ், படூர் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜே.பூவிதா முன்னிலை
வகித்தனர். உத்திரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு ஆரம்பசுகாதார
நிலைய செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் ஒன்றிய செயலாளர்
பிரகாஷ்பாபு, சேர்மென் கமலக்கண்ணன், துணைச்சேர்மென் அ.ரவிசங்கர், வாலாஜாபாத் சேர்மென்
என்.எம்.வரதராஜீலு, கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தண்டரைதணிகைவேல், தொகுதி
செயலாளர் கே.ஆர்.தருமன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டகுழு உறுப்பினர்
சுமதிகுணசீலன், உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி கழக செயலாளர் கே.செல்வம்(எ)செல்வகுமரன்
நன்றி கூறினார்.
No comments