Disqus Shortname

ஒழையூரில் வருவாய் திட்ட முகாம்

உத்திரமேரூர் அக்,24
உத்திரமேரூர் அடுத்த ஒழையூர் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம் நேற்று
நடைபெற்றது. ஒழையூர் ஊராட்சி மன்ற தலைவர் எல்லப்பன் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வட்டாட்சியர் இரவி அனைவரையும் வரவேற்றார். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்  பிரகாஷ்பாபு, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துக்கொண்டு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவிதொகை மூன்று பயானாளிகளுக்கு தலா ரூபாய் 8ஆயிரம் வீதம் 24 ஆயிரத்திற்க்குண்டான காசோலை வழங்கினார்.  இம்முகாமில் 40 மனுக்கள் பெறப்பட்டனர். 9 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது. 31மனுக்கள் நிலுவையில் உள்ளது. நிகழ்ச்சியில் வருவாய் திட்ட அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்துகொண்டனர்.

No comments