Disqus Shortname

இளம் வழக்கறிஞர்களுக்கு சட்ட புத்தகம் வழங்கும் விழா

 உத்தரமேரூர் அக்,27:
 உத்திரமேரூர் நீதிமன்ற வளாகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு சட்ட புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் டி.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க நிறுவனரும் மூத்த வழக்கறிஞருமான ஏசுமரியான் இலவச சட்ட புத்தகங்களை, இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். உத்திரமேரூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளம் வழக்கறிஞர்கள் 21 பேருக்கு சட்ட புத்தகங்களை வழங்கி, சட்ட அறிவை வளர்த்து கொண்டு சிறந்த வழக்கறிஞர்களாக திகழ வேண்டும், இலவச சட்ட உதவிகளை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கொண்டு சேர்த்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார். முடிவில் வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கம் செய்தது.

No comments