Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கணவரை தாக்கிய மனைவி கைது

உத்திரமேரூர், அக். 03
உத்திரமேரூர் அடுத்த குறும்பரை கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் (44). இவரது மனைவி காந்திமதி (39). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் காந்திமதிக்கும் காத்தவராயனுக்கு அடிக்கடி சட்டை ஏற்படும். நேற்று முன்தினம் இரவும் ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த காந்திமதி, வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து காத்தவராயனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். ரத்தம் கொட்டியது. காத்தவராயன் அலறினார். சத்தம் கேட்டு அருகில் அருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திமதியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

No comments