Disqus Shortname

பக்ரீத் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

உத்திரமேரூர் அக், 07 :
 பக்ரீத் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  முஸ்லிம்களின் முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொழுகை முடிந்ததும் வயது வித்தியாசம் பாராமல் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். உத்தரமேரூரில்   உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments