Disqus Shortname

உத்தரமேரூரில் பட்ட பகலில் வாலிபர் வெட்டி படுகொலை

உத்தரமேரூர் அக்,16

உத்தரமேரூர் கேதாரீஸ்வரர் கோவில் தெருவில் வசிப்பவர் ரங்கநாதன் இவரது மகன் வினோத்ராஜ் (28)  இவர் மீன் வியாபாரம் செய்த
வருகிறார். இவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் உத்தரமேரூரை அடுத்த கரிக்கிலி சித்தாமூரை சேர்ந்த கருணாநிதி மகன் சதிஷ்குமார் (24) உத்தரமேரூர் அருகில் உள்ள சிப்கார்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் 3 மணியளவில் வினோத்ராஜ் குடிபோதையில் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளை நிறுத்தி கலாட்டா செய்து வந்தார். அப்போது உத்தரமேரூர் வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்த சதிஷ்குமாரை வினோத்ராஜ் வழி மறித்து தன்னை மதுபான கடைக்கு அழைத்து செல்லுமாறு வற்ப்புறுத்தினார். அதற்கு சதிஷ்குமார்
மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத்ராஜ் அருகில் இருந்த மீன் கடையில் உள்ள கத்தியை எடுத்த சதிஷ்குமாரை கழுத்து மார்பு பகுதியை வெட்டினார். உடனே சதிஷ்குமார் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சதிஷ்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதிஷ்குமார் உயிர் இழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போதையில் இருந்த வினோத்ராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் நடுரேட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.    

No comments