Disqus Shortname

கடல்மங்கலத்தில் இலவசகண் சிகிச்சை முகாம்

உத்தரமேரூர் அக்,28
உத்தரமேரூர்  தாலுக்கா கடல்மங்கலம் கிராமத்தில் அண்மையில் சுவாமி விவேகானந்தர் சேவா சங்கமும், ஸ்ரீ.ராமகிருஷ்ணமடமும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மல்லியங்கரணை ஸ்ரீ.ராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் அமூர்தானந்தா சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி தலைமை தாங்கி முகாமை துவக்கிவைத்தார், ஆசிரியை சாவித்திரி வரவேற்றார். சென்னை சங்கரா கண் மருத்துவ கல்லூரி மருத்துவர் ஜி.குருமூர்த்தி தலைமையில் மருத்துவர்கள் உத்தரமேரூர் டாக்டர்.கே.பரமசிவம் உட்பட மருத்துவ குழுவினர்கள் கண் பரிசோதனை செய்தனர். 147 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது, 20நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்யவும், 17 நபர்களுக்கு விழிலென்ஸ் இலவசமாக பரிசோதனை செய்ய அழைத்து செல்லப்பட்டனர். இவ்விழாவில் கடல்மங்கலம் ஊராட்சி மன்றதலைவர் தே,வீராசாமி, இராமகிருஷ்ணாமிஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ஏழுமலை பங்கேற்றனர். குமார் ஐய்யங்கார் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கடல்மங்கலம் சுவாமி விவேகானந்தர் சேவா சங்க உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments