Disqus Shortname

உத்தரமேரூரில் மெய்யுணர்வு மையம் பயிற்சி முகாம்

உத்தரமேரூர் பிப்21
உத்தரமேரூர் ஜெயா திருமண மண்டபத்தில் புதன்கிழமையன்று இலவச மெய்யுணர்வு பயிற்சி முகாம் நடந்தது. டாக்டர் பி.ஆனந்த் தலைமை தாங்கினார். எஸ்.கமல்கிஷோர் வரவேற்றார். அரிமா சங்க தலைவர் யு.அமர்த்லால் , ஜி.சிவக்குமார் ஆர்.கணேஷ்சீனிவாசன் முன்னிலை வகித்தனர். மலேசியா மற்றும் மெய்யுணர்வு மைய நிறுவனர்  க.மு.சிவசுவாமி மெய்யுணர்வு அனுபவ பயிற்ச்சியின் இலவச முன்னுரையில் 21 ஆம் நுாற்றாண்டில் மனோபாவமும் அறிவுத்திறனும் இனைந்தால் மட்டும் வாழ்க்கையில் சிறப்பாக வாழலாம் என்ற அனுபவ பூர்வமான வெற்றியை எளிய முறையில் விளக்கும் பயிற்ச்சி இது மேலும் உடல் ஆரோக்கியமாக வாழவும் மனித வாழ வேண்டிய நடைமுறைப்பற்றியும் கற்றுக் கொள்வதை  கடைப்பிடிப்பது எப்படி போன்ற கருத்துகளை இப்பயிற்சி மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். 457 பேர் இப்பயிற்ச்சியில் பங்கேற்றனர். முருகானந்தம் நன்றி கூறினார்.

No comments