மல்லியங்கரணை இராமகிருஷ்ணா மிஷன் பள்ளி 16-ம் ஆண்டு விழா
உத்தரமேரூர் பிப்-2
உத்தரமேரூர்
பேரூராட்சிக்குட்பட்ட மல்லியங்கரணை கிராமத்தில் ஸ்ரீஇராமகிருஷ்ணா மிஷன்
உயர்நிலைப்பள்ளி 16-வது ஆண்டு விழா வியாழக்கிழமையன்று நடந்தது. ஓய்வுபெற்ற
தேர்தல் ஆணையர் டி.கே.ஓஷா தலைமை தாங்கினார். சுவாமி அமூர்தானந்தா முன்னிலைவகித்தார். சுவாமி பாவபிரியானந்தா வரவேற்றார். பள்ளித்தலைமை
ஆசிரியர் ஆ.ஏழுமலை ஆண்டறிக்கை வாசித்தார். உயர்நீதிமன்ற சீனியர்
வழக்கறிஞர் டி.எஸ்.இராமசாமி பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். செங்கற்பட்டு சுவாமி தத்பாஷானந்தா வாழ்த்தி பேசினார். பள்ளி
மாணவ மாணவியர் நாட்டியம், பாட்டு பேச்சுப்போட்டி, கலைநிகழ்ச்சிகள்,
நாடகங்கள் சிறப்பாக நடத்தினர். ஆசிரியை எம்.குப்பி நன்றி கூறினார்.
No comments