அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு
உத்தரமேரூர் பிப்-9
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் முன்மாதிரி நடுநிலைப்பள்ளியில் ரூ.4.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டட திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சு.ஆரோக்கியதாஸ் வரவேற்றார். ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் அங்கன்வாடி மைய புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அ.ரவிசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். பேரூராட்சி துணைத் தலைவர் இ.தயாளன் நன்றி கூறினார்.
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் முன்மாதிரி நடுநிலைப்பள்ளியில் ரூ.4.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டட திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சு.ஆரோக்கியதாஸ் வரவேற்றார். ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் அங்கன்வாடி மைய புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அ.ரவிசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். பேரூராட்சி துணைத் தலைவர் இ.தயாளன் நன்றி கூறினார்.
No comments