Disqus Shortname

திருமணமான 9 மாதத்தில் இளம் பெண் சாவு


உத்தரமேரூர் பிப்,21


திருமணமான 9 மாதத்தில் இளம் பெண் சாவு உத்தரமேரூர் அருகே புழுதிவாக்கம் கிராமத்தை சேர்ந்த பானுமதி மகள் வளர்மதி (23) செவ்வாய்கிழமை இரவு மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் அரும்பன் இவரது மகன் தயாளன் (35) மதுராந்தகம் அருகே உள்ள புக்கத்துரை கூட்ரோட்டில் கார் ரிப்பேர் செய்யும் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவரது முதல் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து இறந்துள்ளார் முதல் மனைவிக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்  தயாளன் உத்தரமேரூர் அருகே உள்ள புழுதிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் பானு என்பவரின் மகள் வளர்மதியை (23) சென்ற மே மாதம் 4ம்தேதி இரண்டாவததாக திருமணம் செய்துகொண்டார். செவ்வாய்க்கிழமையன்று மாலை 4 மணிக்கு வளர்மதியின் தந்தை ஏழுமலை மகளை பார்பதற்க்காக வீரணாக்குண்ணம் சென்று இருந்தார் அப்போது வளர்மதி நாக்கு கடித்த நிலையில் கண்கள் சிவக்க படுக்கையில் இறந்துகிடந்தார் கழுத்தில் கயிர் இறுக்கப்பட்டதற்க்கான காயங்கள் இருந்தன. தொடையிலும் கையிலும் சிறு சிறு காயங்கள் காணப்பட்டது. இதை அடுத்து வளர்மதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக வளர்மதியின் தாய் பானு மதுராந்தகம் போலீசில்  புகார் செய்தார். இன்ஸ்பெக்ட்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார். மேலும் வளர்மதியின் பிரேதத்தை கைப்பறிய போலீசார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதபரிசோதனைக்கு பின்னர் வளர்மதி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து புழுதிவாக்கம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

No comments