சின்னமாகுளம் சர்வ சேவா பள்ளிகள் ஆண்டு விழா
உத்தரமேரூர் பிப்,21
உத்தரமேரூர் தாலுக்கா சின்னமாகுளம் சர்வ சேவா உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா புதன்கிழமையன்று(20-02-2013) பள்ளி வளாகத்தில் நடந்தது. தொடக்கப்பள்ளி ஆசிரியை விஜி வரவேற்றார். மண்டல இயக்குனர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வரலட்சுமி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ப.விநாயகம் ஆண்டறிக்கையை வாசித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் டி.பரசுராமன் முன்னிலை வகித்தார். பெருங்கோழி ஆலய அருட்தந்தை டி.ராபர்ட் கட்டியாம்பந்தல் இயற்கை வழி வேளாண்மை பன்ணை உரிமையாளர் ஆர்.கண்ணன்ராஜகோபால், பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்கள். மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.
No comments