அத்தியூர்மேல்தூளியில் ரூ.8.15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்புவிழா
உத்தரமேரூர் பிப்-11
உத்தரமேரூர்
ஊராட்சி ஒன்றியம், அத்தியூர்மேல்தூளி கிராமத்தில் ரூ.8.15 லட்சத்தில்
புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்புவிழா திங்கட்கிழமையன்று
நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலுவலர் (கி.ஊ) உஷாராணி அனைவரையும் வரவேற்றார். புதிதாக
கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்
வாலாஜாபாத் பா.கணேசன் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், ஒன்றிய
கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, வட்டார வளர்ச்சி
அலுவலர் மில்டன்ஜான்பிரபு (வ.ஊ), தாசில்தார் கே.தேவராஜன், கிளைகழக
செயலாளர்கள் வேல்முருகன், சிவலிங்கம், ஒன்றிய கழக அவைத்தலைவர்
சி.சுப்புரெட்டியார் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர்
என்.அர்ச்சுணன் நன்றி கூறினார்.
No comments