உத்தரமேரூரில் மக்கள் கலைவிழா
உத்தரமேரூர் பிப்-4
உத்தரமேரூர் பேருந்துநிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மக்கள் கலைவிழா நடந்தது. மருத்துவர் த.சோழன் தலைமை தாங்கினார். க.சங்கரன், தி.கதிரேசன், செல்லன், வி.கே.பெருமாள், வி.மகேஷ்பாபு, ஜி.ஆர்.டி.சங்கர், வே.இரா.பழனி, சூரி, லோகநாதன், பா.வடிவேல் முன்னிலை வகித்தனர். சு.பாலாஜி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சிங்கை சண்முகசுந்தரம் துவக்கஉரையாற்றினார். கவிசேகர் தே.குமார், தி.வை.ஆனந்தகுமார், ஆசூர்செல்வம், ராஜபாரதி, ஜெயராமன் மற்றும் தவில்.ஆதி ஆகியோர் மண்ணின் மனம் கமழும் கிராமியபாடல்களை பாடினர். இனி ஒரு விதிசெய்வோம் கவிஞர் முகில் சிந்தை நெகிழ்க்கும் உரையாற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுபா, காவனூர்புதுச்சேரி சேகர், பெ.குமாரசாமி உள்பட பலர் நெஞ்சை கவிச்சரம் தொடுத்தனர். மணித்தமிழன் பலகுரல் நிகழ்வு நடத்தினார். முடிவில் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.
No comments