737 பயனாளிகளுக்கு பேன், மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா
உத்தரமேரூர் பிப்-12
உத்தரமேரூர் தாலுக்கா குண்ணவாக்கம் கிராமத்தில் 240, புலிப்பாக்கம் 235, அம்மையப்பநல்லூர் கிராமத்தில்
262 பேருக்கும் ஆக மொத்தம் 737 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, பேன்,
கிரைண்டர்களை திங்கட்கிழமையன்று உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி பாராட்டி பேசினார். அம்மையப்பநல்லூரில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.கோவர்தணன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் ஒன்றிய
குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை
வகித்தனர். உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் வரவேற்றார். தொகுதி
செயலாளர் கே.ஆர்.தருமன், மாவட்டகுழு உறுப்பினர் சுமதிகுணசீலன், ஒன்றிய கழக
செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, ஊராட்சி மன்றத்தலைவர்கள்
குண்ணவாக்கம் இ.பெருமாள், அத்தியூர்மேல்தூளி
ஆர்.அரிகிருஷ்ணண், அம்மையப்பநல்லூர் ஆர்.ஜெயராமன், கே.ராஜகாந்தன், கிளை
செயலாளர் துலுக்காணம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ) உஷாராணி, மில்டன்ஜான்பிரபு (வ.ஊ) உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments