நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
உத்தரமேரூர்
மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட
சிறப்பு முகாம் உத்தரமேரூர் அருகில் உள்ள கடல்மங்களம் கிராமத்தில் இன்று
துவக்கப்பட்டது. தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் மருத்துவ
விழிப்புணர்வு யோகா தீ விபத்து பாதுகாப்பு முதியோர் பாதுகாப்பு சித்த
வைத்தியம் மரக்கன்று நடுதல் கால்நடை பராமரித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற
உள்ளன. இன்றைய சிறப்பு முகாம் துவக்க விழாவில் ஒருங்கிணைப்பாளர்
இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் இராஜா தலைமை
தாங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் வீராசாமி முன்லை வகித்து பேசினார்.
இராமகிருஷ்ணா மிஷின் செயலாளர் சுவாமி அமுர்தானந்தா சிறப்புரையாற்றினார்.
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், துணைத்தலைவர் மற்றும் திரளான
பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். முதற்கட்டமாக
கடல்மங்களம் மூங்கில் அம்மன் கோவில் வளாகத்தை நாட்டு நலப்பணித்திட்ட
மாணவர்கள் சுத்தம் செய்தனார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மோகன் நன்றி
கூறினார்.
No comments