Disqus Shortname

விலையில்லா பொருட்கள் வழங்கல்

உத்தரமேரூர் தாலுக்கா, காவாம்பயிர் ஊராட்சி புத்தளி கிராமத்தில்  பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பேன், மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது.
ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் கே.தேவராஜன் வரவேற்றார்.  278 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்ஸி, கிரைண்டர்களை உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்.
காவாம்பயிர் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments