Disqus Shortname

உத்தரமேரூரில் வார இதழ் எரிப்பு ஆர்பாட்டம்


உத்தரமேரூர் பிப். 17
உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று உத்தரமேரூர் ஒன்றிய தி,மு,கவினர் வார இதழை எரித்து ஆர்பாட்டம் செய்தனர், முன்னாள் முதல்வரும் தி,மு,க தலைவருமான கருணாநிதியை பற்றி குமுதம் ரிப்போட்டர் வார இதழில் அவதுாறாக செய்தி வெளியிட்டுள்ளதாக கூறி அவ்வார இதழ் ஆசிரியர் மற்றும், வார இதழ் நிறுவனரையும் கண்டித்து தி,மு,க மாவட்ட அவைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமையில் தி,மு,க ஒன்றிய கழக செயலாளர் இரா.நாகன் முன்னிலையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தி வார இதழை கொளுத்தினார்கள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனுார் மா.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் கே.ஞானசேகரன், பேரூர் கழக செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன், ஒன்றிய அவைத்தலைவர் க.சீத்தாராமன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நா.உதயசூரியன், வெ.கோவிந்தராஜ். அ,சுந்தர், சுப்பராயன், கோ.தவனகிரி, நெமிலிப்பட்டு த.பாபு, வெ.கிருஷ்ணமூர்த்தி, வி.பாலாஜி, வசந்தா, ஜெயகாந்தா, கே.எம்.எல்லப்பன், அப்துல்ஹக்கிம்,எம்.மோகனரங்கன், ஜி.முருகன், இரா.சங்கர், இரா.அப்பு, எம்.ராமு, கு.ராஜா, வி,ரவி, உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்று குமுதம் ரிப்போட்டர் வார இதழை கொளுத்தினர்.

No comments