Disqus Shortname

வெள்ள நிவாரணம் கோரி திருவாணைக்கோவில் மக்கள் மனு

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி உத்தரமேரூர் வட்டாட்சியரிடம் திருவாணைக்கோவில் பகுதி பொதுமக்கள் அண்மையில் மனு அளித்தனர்.
உத்தரமேரூர் வட்டம், திருவாணைக்கோவில் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தும், வீடுகளை இழந்தும், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியும் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழக அரசு வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாணைக்கோவில் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி ஊராட்சித் தலைவர் டில்லி உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உத்தரமேரூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் டில்லி கூறுகையில், கடந்த வாரம் பெய்த பலத்த மழையில் எங்கள் பகுதி பெருமளவு பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

No comments