Disqus Shortname

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

உத்திரமேரூர் நவ 28.

உத்திரமேரூரில் காஞ்சி தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம்
முன்னேற்றக்கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டசெயல்
வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்
ஷாஜகான் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் ஜாகீர்உசேன், நகரச்
செயலாளர் தாஜிதீன், எம்.இக்பால் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் யாக்கூப்,
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம்பாஷா, பேராசிரியர் ஷாஜாகனி ஆகியோர்
சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினமான வரும்
டிசம்பர் 6 அன்று மதுராந்தகத்தில் நடைப்பெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு
முஸ்லீம் அல்லாத மாற்று மதத்தினர்களையும் அழைத்து வரவேண்டும்,
பெருந்திளான கூட்டத்தோடு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ப்பது, கட்சி
செயல்பாடுகள் பற்றியும், வரும் தோ்தலில் நடைமுறை படுத்த வேண்டிய பணிகளை
பற்றியும் நிர்வாகிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் நகர பொருளாளர்
அலிமுகம்மது நன்றி கூறினார்

No comments