நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மு.க.ஸ்டாலின் 5ம் தேதி உத்திரமேரூர் வருகிறார்
உத்திரமேரூர் Nov 3:
திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாளையும் நாளை
மறுநாளும் (4, 5ம் தேதிகளில்) மு. க. ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு
வருகிறார். 4ம் தேதி காஞ்சிபுரத்திற்கு வரும் மு. க. ஸ்டாலின்
நெசவாளர்களை சந்தித்து, குறைகளை கேட்டறிகிறார்.
பின்னர் மூத்த பத்திரிகையாளர்கள், பிரமுகர்களை சந்திக்க உள்ளார். 5ம்
தேதி காஞ்சிபுரத்தில் இருந்து நடைபயணமாக உத்திரமேரூர் செல்கிறார்.
அங்குள்ள குடஓலை தேர்தல் குறித்த பழங்கால கல்வெட்டை பார்வையிடுகிறார். தொடர்ந்து, பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
மேலும் மதுராந்தகம் ஏரியை பார்வையிட்டு, செய்யூரில் உள்ள விவசாயிகளை சந்திக்கிறார்.
இதற்காக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமையில், நிர்வாகத்தினர் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
No comments