வியாபாரிகள், காவல் துறையினர் விழிப்புணர்வுக் கூட்டம்
உத்திரமேரூர்.அக்.31
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரமேரூர் காவல்
நிலையத்துக்கு உள்பட்ட அடகு கடை, நகைக் கடை, வங்கிகள், வணிக வளாக
உரிமையாளர்கள், ஊழியர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் உத்தரமேரூரில்
வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், உத்தரமேரூர் காவல் ஆய்வாளர் மணிமாறன் பேசியதாவது: பொதுமக்கள்
அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், நகைக் கடைகள் உள்ளிட்ட இடங்களில்
கேமராக்கள் பொருத்த வேண்டும். பகல் நேரங்களில் வெளிமாநிலத்தவர்கள்,
சந்தேகத்துக்கு இடமான வகையில் யாராவது சுற்றித் திரிந்தால் அவர்களை
கண்காணித்து தகவல் அளிக்க வேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தில் அடகுக்
கடை, நகைக் கடை, வங்கிகள், வணிக வளாக உரிமையாளர்கள், வியாபாரிகள்
சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
No comments