Disqus Shortname

மானாம்பதியில் சமுதாய சுகாதார நில வேம்பு குடிநீர் கசாயம் விநியோகம்

காஞ்சிபுரம் நவ 29.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி சமுதாய சுகாதார நிலையத்தில் அரசு சித்த மருத்துவப்பிரிவின் சார்பாக நில வேம்பு குடிநீர் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி (முகாம்) நடைப்பெற்றது. ஒன்றிய குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார் மானாம்பதி ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் சிறப்புரையாற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். மேலும் சித்த மருத்துவர் இரா.கிரிஜா நிலவேம்பு குழநீர் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் வராமல் தடுக்கிறது என்பதை சுட்டிக்காட்டி மக்களுக்கு அறிவுறுத்தினார். மருத்துவ அலுவலர் சுகந்தி, சித்தமருத்துவ மருந்தகர் அன்புசெல்வி பாம்பன் பழனி ஒன்றிய குழு அமைப்பாளர் அ.ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார புள்ளியாலர் தேவகுமார் நன்றிகூறினார்

No comments