Disqus Shortname

ஓய்வூதியம் கேட்டு காத்திருக்கும் போராட்டம்

உத்திரமேரூர்Nov 13
: நிறுத்தம் செய்யப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதியம், மீண்டும் வழங்க வலியுறுத்தி உத்திரமேரூர், வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன், நேற்று, காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த இப்போராட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்ட செயலர் பிரமிளா தலைமை தாங்கினார்.ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் உள்ள முதியோர்கள் மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரசு வழங்கி வந்த உதவித் தொகை காரணமின்றி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.எனவே, அத்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என, போராட்டக் குழுவினர் கோஷமிட்டனர்.உத்திரமேரூர் வட்டாட்சியர் அரிதாஸ் போராட்ட குழுவினரை சந்தித்து சமாதான பேச்சு நடத்தினார்.மேலும், இது தொடர்பான மனுக்களைப் பெற்று கொண்ட அவர், மனுக்கள் மீது முறையான ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து, போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.

No comments