Disqus Shortname

உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

உத்திரமேரூர் நவ29
உத்திரமேரூர் பஜார் வீதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பொது மருத்துவமனையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்துவமனையின் கட்டிடங்கள் பாதுகாப்பாக உள்ளதா மற்றும் நோயாளிகளின் படுக்கைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். அப்போது மருத்துவமனை அருகே இருந்த குப்பைகளை அகற்றியும் தேங்கியுள்ள மழை நீரை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தினார் நிகழ்வின்போது மருத்துவ அலுவலர் சுரேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் லதா உட்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மழையால் பாதிக்கப்பட்ட வெங்கச்சேரி அருகே உள்ள செய்யாற்று தரைபாலத்தினை பார்வையிட்டார். மேலும் உத்திரமேரூர் ஏரி மற்றும் அனுமந்தண்டலம் தடுப்பனையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

No comments