Disqus Shortname

உத்திரமேரூர் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவி பலி

உத்திரமேரூர் 05/11/2021 உத்திரமேரூர் அடுத்த தினையாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் கூலித்தொழிலாளி இவரது மகள் யாழினி 13 இவர் களியாம்பூண்டி அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள நீர்நிலைப் பகுதியில் இயற்கை உபாதை வெளியேற்ற சென்றிந்தார். அப்போது எதிர்பாராத விதமாக யாழினிக்கு வலிப்பு ஏற்பட்டு அங்கு தேங்கி இருந்த செற்றில் நீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற அப்பகுதியினர் யாழினியினை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனை பரிசோதனையில் யாழினி ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து பெருநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து யாழினி உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments