Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பாழடைந்த சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி

உத்திரமேரூர் அடுத்த சிறுபினையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரிடம் விவசாய வேலை செய்து வந்தவர் நாகப்பன் 65. இந்நிலையில் முருகன் நாகப்பனை தங்க வைக்க வீட்டின் அருகே கொட்டகை அமைத்து அங்கேயே தங்க வைத்துள்ளார். கொட்டகையின் அருகே பயன்படுத்தாத பாழடைந்த அறை ஒன்று உள்ளது. இந்த அறையின் சுவர் தற்போது பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்து இருந்தது. இந்நிலையில் நேற்று காலை திடீரென சுவரின் ஒருபகுதி இடிந்து குடிசை மீது விழுந்த்து. இதில் குடிசையின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த நாகப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகப்பனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments