Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கல்

உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்  சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட மல்லிகாபுரம் பகுதியில் மழை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக் திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள்  நகர செயலாளர் பாரிவள்ளல் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன் குமார்.   மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும்  காஞ்சி எம்.பி ஜி.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக அரிசி காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கி ஆறுதல் கூறினர். நிகழ்வின்போது செயல் அலுவலர் லதா உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments