உத்திரமேரூர் அருகே உலக கை கழுவும் தினம் கிராம மக்கள் உறுதி மொழி ஏற்பு
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் ஊரக உள்ளாட்சித்துறை
சார்பில் உலக கை கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல
வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு
உறுப்பினர் சுகுணாசுந்தர்ராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் ராதா ஆகியோர்
முன்னிலை வகித்தார் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை
அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கிராம மக்கள் முன்னிலையில்
சாப்பிடும் முன்பும் பின்பும் கைகள் நன்கு கழுவ வேண்டும், மலம் ஜலம்
கழித்தப்பின் கைகளை கழுவுதல் அவசியம் மற்றும் கை கழுவும் முறை
பற்றியும் தன் சுத்தம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் சுற்றுப்புறத்
தூய்மை, பிளாஸ்டிக் தவிர்ப்பு, கட்டாயம் கழிவறை பயன்படுத்துவது, மழை
நீர் சேகரிப்பு, டெங்கு தடுக்க முன்னெச்சரிக்கைகள் குறித்த உறுதிமொழி
ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு
உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
No comments